/tamil-ie/media/media_files/uploads/2023/08/thir.jpg)
திருமாவளவன்
நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசி திருமாவளவன் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த 17 வயது பட்டியல் சாதி மாணவர் ஜாதிரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாகி அவரையும் அவரது தங்கையையும் வெட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 6 சிறார்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் மத்தியில் சாதிய மனநிலை மோசமாக பரவி இருப்பதை, சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர். அரசியல் தலைவர்கள், மற்றும் முக்கிய பிரபலங்கள் இந்த சம்பவத்தை கண்டித்து பதிவுகளை வெளியிட்டனர்.
இந்நிலையில் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன், பாதிக்கப்பட்ட சின்னதுரைக்கு வீடியோ காலில் பேசி ஆதரவு தெரிவித்துள்ளார்.
”தைரியமா இருங்கள். பயப்பட வேண்டாம். நன்றாக படிக்க வேண்டும். என்னால் நேரில் வர முடியவில்லை என்பதால் போனில் பேசுகிறேன். நிச்சயம் நேரில் சந்திப்பேன்” என்று திருமாவளவன் வீடியோ காலில் ஆறுதல் கூறினார்.
மேலும் சின்னதுரையின் தங்கையிடமும் அவர் பேசினார். மேலும் இந்த சம்பவம் போல இப்பகுதியில் பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதை பற்றி பேசவே மக்கள் பயப்படுகின்றனர் என்று சின்னதுரையின் உறவினர்கள் கூறினர். இதற்கு எதிராக நவடிக்கை எடுக்க எங்களுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.