AIADMK BJP alliance breakup: அதிமுக பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு கருத்து கூறியுள்ள நிலையில், பாஜக துணை தலைவர் நாராயனண் திருப்பதி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் ஏற்பட கூடியது. தற்போது கூட்டணி இல்லை. மேலும், அண்ணாமலை பற்றி ஜெயக்குமார் பேசியது முற்றிலும் தவறானது” என்றார்.
தொடர்ந்து, “அண்ணாமலை தலைவராக இருக்க தகுதி இல்லாதவர் எனக் கூறுவதற்கு அவர் யார்? எனவும் கேள்வியெழுப்பினார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். அப்போது அண்ணாத்துரை குறித்து அவர் பேசியது சர்ச்சையானது.
இந்த நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி இடையே முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகிவருகிறது.
முன்னதாக இது தொடர்பாக பேசிய டி. ஜெயக்குமார், “அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இல்லை என்றும், அண்ணாமலை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் வாக்கு கிடைக்கும்” என்றார்.
தொடர்ந்து, அண்ணாமலையின் தலைமை பொறுப்பு குறித்தும் அவர் விமர்சித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இதைச் சொல்ல ஜெயக்குமார் யார்? பா.ஜ.க கடும் எதிர்ப்பு
கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் ஏற்பட கூடியது. தற்போது கூட்டணி இல்லை. மேலும், அண்ணாமலை பற்றி ஜெயக்குமார் பேசியது முற்றிலும் தவறானது” என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறினார்.
பாஜக துணை தலைவர் நாராயனண் திருப்பதி
AIADMK BJP alliance breakup: அதிமுக பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு கருத்து கூறியுள்ள நிலையில், பாஜக துணை தலைவர் நாராயனண் திருப்பதி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் ஏற்பட கூடியது. தற்போது கூட்டணி இல்லை. மேலும், அண்ணாமலை பற்றி ஜெயக்குமார் பேசியது முற்றிலும் தவறானது” என்றார்.
தொடர்ந்து, “அண்ணாமலை தலைவராக இருக்க தகுதி இல்லாதவர் எனக் கூறுவதற்கு அவர் யார்? எனவும் கேள்வியெழுப்பினார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “என் மண் என் மக்கள்” என்ற நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். அப்போது அண்ணாத்துரை குறித்து அவர் பேசியது சர்ச்சையானது.
இந்த நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி இடையே முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகிவருகிறது.
முன்னதாக இது தொடர்பாக பேசிய டி. ஜெயக்குமார், “அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இல்லை என்றும், அண்ணாமலை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் வாக்கு கிடைக்கும்” என்றார்.
தொடர்ந்து, அண்ணாமலையின் தலைமை பொறுப்பு குறித்தும் அவர் விமர்சித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.