/indian-express-tamil/media/media_files/2024/11/13/Q4RxaXJ1sV8CjK3VGYZJ.jpg)
சென்னையில் வசித்து வரும் சின்னத்திரை நடிகைக்கு பல்வேறு வகையான போதைப் பொருள்கள் விநியோகம் செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் வசித்து வருபவர் கே. எஸ்தெர் என்கிற மீனா. சின்னத்திரை நடிகையான இவரை, கடந்த சனிக்கிழமையன்று கோவிளம்பாக்கம் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி அருகே போலீசார் கைது செய்தனர். அவரிடம் போதைப் பொருள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, அவரிடமிருந்து 5 கிராம் அளவிலான மெத் எனப்படும் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, அவர் போதைப் பொருளை உட்கொண்டாரா எனக் கண்டறிவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், எஸ்தெர் வழக்கை விசாரித்து வரும் சிறப்பு பிரிவினர், அவருக்கு போதைப் பொருள்கள் விநியோகித்த டைஸன் மற்றும் பவன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதில் டைஸனை பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும், சண்டிகரைச் சேர்ந்த பவனை, சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவர்களில், மெத் போதைப் பொருளை பவன் விநியோகம் செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மலானா எனப்படும் ஒரு வகை கஞ்சாவை, எஸ்தெருக்கு டைஸன் விநியோகம் செய்துள்ளார்.
இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்திய போலீசார், தற்போது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us