Advertisment

பிரதமர் மோடியை, ‘பயந்தாங்கொள்ளி, கோழை’ என்பதா? வைகோ.வுக்கு தமிழிசை கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியை, ‘பயந்தாங்கொள்ளி, கோழை’ என்பதா? என வைகோ.வுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Narendra Modi Chennai Visit, Tamilisai condemns Vaiko

Narendra Modi Chennai Visit, Tamilisai condemns Vaiko

பிரதமர் நரேந்திர மோடியை, ‘பயந்தாங்கொள்ளி, கோழை’ என்பதா? என வைகோ.வுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஏப்ரல் 12) சென்னை வருகிறார். சென்னையில் அவர் 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காலை 9.30 மணியளவில் தனி விமானத்தில் சென்னை வந்து சேரும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை செல்கிறார். அங்கு நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை பார்வையிடுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிஹாப்டரில் மீண்டும் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் சென்று, அங்கு நடைபெறும் வைரவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மையத்தில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்கிருந்து காரில் சென்னை விமான நிலையம் திரும்புவதாக அதிகாரபூர்வ பயணத் திட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் அந்த பயண முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியில் கலந்து கொண்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரிலேயே அடையாறில் உள்ள ஐஐடி மைதானத்தில் வந்து இறங்குகிறார். ஐஐடி வளாகமும், புற்று நோய் ஆராய்ச்சி மையமும் அடுத்தடுத்து உள்ளன. ஐஐடி வளாகத்தில் இருந்து ஒரு சுவரை மட்டும் உடைத்து புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு பாதை அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி, அடையாறு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரிலேயே சென்னை விமான நிலையத்திற்கு திரும்புகிறார். இதன் மூலமாக சென்னையில் சாலை மார்க்கமாக பயணிப்பதை பிரதமர் மோடி தவிர்ப்பதாக தெரிய வந்திருக்கிறது.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஏற்கனவே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று அளித்த பேட்டியில், ‘பிரதமர் மோடிக்கு நெஞ்சுரம் இருந்தால், சென்னையில் சாலை மார்க்கமாக பயணிக்க வேண்டும். கருப்புக் கொடியை கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்? கருப்புக் கொடியில் தோட்டாக்களை வைத்து சுட்டுவிடவா போகிறோம்? நீங்கள்தான் 56 இன்ஞ் உடல் கொண்டவர் ஆயிற்றே? நீங்கள் முசோலினியாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் முசோலினியிடம் இருந்த துணிச்சல் உங்களிடம் இல்லை’ என்றார் வைகோ.

வைகோ.வின் இந்த கருத்துக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தமிழிசை தனது ட்விட்டர் பதிவில், ‘பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் வழக்கமான ஒன்றே, அதை கோழை, பயந்தாங்கொள்ளி என கீழ்த்தரமாக விமர்சித்த வைகோ அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம், இதை சொல்லும் திரு.வைகோ யாருக்கு பயந்து கள்ளதோணியில் இலங்கை சென்றார்? பிரதமர் முன்அறிவிப்பு இல்லாமல் தீவிரவாத நாடான பாக்கிஸ்தானுக்கே தைரியமாக சென்றவர்’ என குறிப்பிட்டிருக்கிறார் தமிழிசை.

மோடி குறித்த வைகோவின் விமர்சனம், சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறதி.

 

 

Narendra Modi Tamilisai Soundararajan Vaiko Cauvery Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment