விதிமீறல் செய்யும் குவாரிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது: தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபடும் குவாரிகளுக்கு அனுமதி புதுப்பிக்கப்படாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபடும் குவாரிகளுக்கு அனுமதி புதுப்பிக்கப்படாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
National Green

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) தெற்கு அமர்வு, சுற்றுச்சூழல் விதிகளை மீறிய அல்லது விதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையை செலுத்தத் தவறிய குவாரிகளுக்கு அனுமதி புதுப்பிக்கக் கூடாது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (TNPCB) NGT திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

கோயம்புத்தூரில் உள்ள சில குவாரிகள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதாக கே. மோகன் குமார் என்பவர் தொடர்ந்த வழக்குகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்தது. இந்த விசாரணையின் போது, உச்சநீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி, சுரங்க குத்தகை, சுற்றுச்சூழல் அனுமதி அல்லது செயல்படுவதற்கான சம்மதம் (Consent to Operate) போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, திட்டக் காரணிகள் அனைத்து முந்தைய உத்தரவுகளையும், அபராதம் மற்றும் சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையை செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளனவா என்பதை புவியியல் மற்றும் சுரங்கத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்ய வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தனது பொதுவான உத்தரவில் வலியுறுத்தியுள்ளது.

புகார்களின் அடிப்படையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அந்த குவாரிகளில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, கோவையில் உள்ள 6 குவாரிகளில் 4 குவாரிகளின் செயல்படும் அனுமதி (Consent to Operate) ஏற்கனவே காலாவதியாகிவிட்டதும், மீதமுள்ள இரண்டின் அனுமதி மார்ச் 2026-ல் காலாவதியாகவிருப்பதும் தெரியவந்தது. மேலும், சில தனியார் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் சுரங்க குத்தகை ஆகியவை காலாவதியானதும் கண்டறியப்பட்டது.

மிக முக்கியமாக, செல்லுபடியாகும் அனுமதி இல்லாமல் சரளைக் கல் மற்றும் ஜல்லி கற்கள் அகழ்வாராய்ச்சி மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது உறுதி செய்யப்பட்டது. விரிவான ஆய்வு நடத்தப்பட்டு, கண்டறியப்பட்ட விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இட ஆய்வுகளின்போது, சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் செயல்படுவதற்கான அனுமதி உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ள பல நிபந்தனைகள் பின்பற்றப்படாதது அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. சுற்று வேலி இல்லாமை, போதுமான பசுமைப் பட்டை வளர்ச்சி இல்லாதது, பாதுகாப்பு தூரங்களைப் பராமரிக்கத் தவறியது, தண்ணீர் தெளிக்காதது மற்றும் நிலத்தடி நீர் அறிக்கைகளை சமர்ப்பிக்காதது போன்றவை இதில் அடங்கும்.

Advertisment
Advertisements

குவாரி ஆபரேட்டர்கள் வழக்கமான சுற்றுப்புறக் காற்றின் தர கண்காணிப்பை நடத்த வேண்டும் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட வெடித்தல் (controlled blasting), வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் முறையான பராமரிப்பு உள்ளிட்ட சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வலியுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளைப் பின்பற்றுவது சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்குவதோடு மட்டுமல்லாமல், குவாரி நடவடிக்கைகளால் ஏற்படும் பாதகமான சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதார விளைவுகளை கணிசமாகக் குறைக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

கூடுதலாக, சுரங்கப் பொருட்களை கொண்டு செல்வதற்கு தார் அல்லது கான்கிரீட் சாலைகள் அமைப்பது போன்ற குறிப்பிட்ட முன்நிபந்தனைகளை குவாரி அலகுகளுக்கு விதிக்குமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தூசி உமிழ்வைக் கட்டுப்படுத்த ஒரு பயனுள்ள வழிமுறையாகும். இந்த உத்தரவுகள் தமிழ்நாட்டின் கனிம வளப் பாதுகாப்பிலும், சுற்றுச்சூழல் சமநிலையை நிலைநாட்டுவதிலும் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: