Advertisment

கடற்படை பேருந்து மோதியதில் கடற்படை வீரரின் கர்ப்பிணி மனைவி மரணம்; டிரைவரிடம் விசாரணை

சென்னையில் கடற்படை பேருந்து மோதிய விபத்தில் எட்டு மாத கர்ப்பிணியான கடற்படை வீரரின் மனைவி உயிரிழப்பு

author-image
WebDesk
New Update
Madhuranthakam woman Divya death case

தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு கடற்படை பேருந்து மோதிய விபத்தில் எட்டு மாத கர்ப்பிணியான கடற்படை வீரரின் மனைவி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் பேருந்தின் ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் சிவா ரெட்டி. இவர் தனது இளம் மனைவி லலிதாவுடன் கடற்படை அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: 3 ஊழியர்கள் பலி: தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி-க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இந்தநிலையில், கர்ப்பிணியான தனது மனைவியைக் கூட்டிக் கொண்டு மெரினா கடற்கரைக்குச் சென்றுள்ளார். தம்பதிகள் சுமார் ஒரு மணி நேரம் கடற்கரையில் நேரத்தைச் செலவிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

தம்பதியினர் மெரினா கடற்கரைக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு காமராஜர் சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நேப்பியர் பாலம் சிவா ரெட்டியின் கட்டுப்பாட்டை இழந்த பைக்கில் இருந்து இருவரும் சாலையில் விழுந்தனர். இது ஒரு மோசமான விபத்து அல்ல, இருப்பினும், பின்னால் வந்த கடற்படை பேருந்து தவறுதலாக லலிதா மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லலிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர், அங்கு மருத்துவர்கள் பெண் மற்றும் சிசு இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனர். குழந்தையைக் காப்பாற்றும் முயற்சியில் லலிதாவின் உடல் கஸ்தூரிபா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதிலும், இந்த விபத்தில் சிசுவும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் விபத்து ஏற்படுத்திய பேருந்து நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பேருந்தை மடக்கி பிடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விவகாரத்தில் ஓட்டுனர் ராகேஷிடம் அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment