/indian-express-tamil/media/media_files/5jplrnk92W1KMc5YzC2P.jpg)
Chennai
திருவண்ணாமலையில் நடைபெறவிருந்த டிரான்ஸ் பார்ட்டியை முறியடித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) போலீசார் ரஷ்ய தம்பதியை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து அமானிதா மஸ்காரியா (ஃப்ளை அகாரிக் காளான்கள்), அயாஹுவாஸ்கா (அமேசான் காடுகளில் இருந்து மூலிகைகளால் செய்யப்பட்ட கான்கோஷன்), கம்போ (தவளை விஷம்) மற்றும் சைலோசைபின் (மேஜிக் காளான்கள்) போன்ற சைகடெலிக் பொருட்களை கைப்பற்றினர்.
மொத்தத்தில், தம்பதியிடமிருந்து 239கிராம் அபாயகரமான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
40 வயது நிரம்பிய தம்பதியினர், பிஸ்னஸ் விசாவில் தனித்தனியாக வந்து 2022 முதல் இந்தியாவில் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரிஷிகேஷ், மணாலி மற்றும் கோவாவில் அயாஹுவாஸ்கா ரிட்ரீட் விழாக்கள் எனப்படும் டிரான்ஸ் பார்ட்டிகளை தம்பதியினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்று சென்னை மண்டலத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் பி அரவிந்தன் தெரிவித்தார்.
ஜூன் 15 முதல் 17 வரை திருவண்ணாமலையில் இதேபோன்ற விருந்து நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர், ஆனால் தகவலின் அடிப்படையில் நாங்கள் அவர்களை முன்கூட்டியே கைது செய்தோம், என்று அதிகாரி கூறினார்.
அயாஹுவாஸ்கா ரிட்ரீட் விழாக்கள் தென் அமெரிக்காவில் பிரபலமாக உள்ளன, அங்கு இது ஒரு மருத்துவ மற்றும் ஆன்மீக நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
அயாஹுவாஸ்காவில் DMT எனப்படும் இயற்கையான மாயத்தோற்றம் இருப்பதால், விருந்தில் கலந்து கொள்பவர்கள் மயக்க நிலையில் உள்ளனர்.
ஹைதராபாத்தில் இத்தகைய ரிட்ரீட் ஏற்பாடு செய்ததற்காக ஒரு டச்சு நாட்டவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், 1985இன் கீழ்DMT வைத்திருந்தது தண்டனைக்குரியது.
இந்த ஜோடி பெலாரஸ் மற்றும் பிற நாடுகளிலிருந்து கொரியர் மூலம் பொருட்களைப் பெற்று, இந்தியாவில் விருந்து ஏற்பாடு செய்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறினர்.
அவர்கள் டெலிகிராம் மூலம் விருந்தில் சேர லிங்க்ஸ் அனுப்பியுள்ளனர். இரண்டு நாள் விருந்துக்கு 1,500 அமெரிக்க டாலருக்கு சமமான கட்டணத்தை அவர்கள் வசூலித்தனர், என்று அரவிந்தன் கூறினார்.
இந்த வழக்கில் இன்னும் சில சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டியிருப்பதால், தம்பதியரின் பெயர்களை வெளியிடாமல்போலீசார் மறைத்தனர். திருவண்ணாமலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.