Advertisment

போதைப் பொருள் வழக்கு: தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல்

போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய தி.மு.க முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

author-image
WebDesk
New Update
jaffer sadiq.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டெல்லியில் கடந்த பிப்.15-ம் தேதி  50 கிலோ போதைப் பொருள் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த முகேஷ், ரகுமான், அசோக் குமார் என்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இவர்களிடம் நடந்த விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. 

 ஜாபர் சாதிக் தி.மு.க-வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார். அண்மையில் இவர் தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். 

கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2000 கோடி மதிப்பில் போதைப் பொருள் விற்பனை செய்ததும் உறுதியானது. இந்நிலையில்,  ஜாபர் சாதிக் தலைமறைவானார். இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வருகின்றனா. 

இதற்கிடையில்,  ஜாபர் சாதிக் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சம்மன் அனுப்பபட்டது. வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. தேபோல் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் சம்மன் ஒட்டப்பட்டது. 

இந்நிலையில், சம்மன் அனுப்பிய நிலையில் ஜாபர் சாதிக் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரது வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சீல் வைத்தனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment