நெல்லையில் மாணவர்களுக்கு அடி, உதை: நீட் பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க கேரளாவில் முகாமிட்டுள்ள தனிப்படை

நெல்லை நீட் பயிற்சி மாணவர்கள் தாக்குதல் விவகாரத்தில் பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

நெல்லை நீட் பயிற்சி மாணவர்கள் தாக்குதல் விவகாரத்தில் பயிற்சி மைய உரிமையாளரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Nella NEET

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் பகுதியில் 'ஜல்' நீட் அகாடமி என்ற தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அகமது பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர் பயிற்சி மையத்தில், மாணவர்களை பிரம்பால் சரமாரியாக தாக்கியும், மாணவிகள் மீது காலணியை தூக்கி வீசியும் உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.

அதன்பேரில் போலீசார், ஜலாலுதீன் அகமது மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர் உடனடியாக கேரளாவுக்கு தப்பிச் சென்று விட்டார்.

இந்நிலையில், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா உத்தரவுப்படி ஜலாலுதீன் அகமதுவை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

Advertisment
Advertisements

இதன்படி ஆய்வாளர்கள் மாரியப்பன், விஜி தலைமையிலான தனிப்படை போலீசார் தற்போது கேரளா மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். 

அங்கு அவரது வீடு மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவர்கள், நீட் பயிற்சி மைய ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் போன்ற பலருக்கு போலீசார்  சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: