மருத்துவம் படிப்பதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று ஆன பிறகு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நாளை (6.5.18) நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா நகரங்களிலும் அதேபோல ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால், ஏழை மாணவர்கள் தேர்வு எழுத செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தவிப்பைக் கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். அவர்களுடன் திரைத்துறையைச் சேர்ந்த பல நடிகர், நடிகைகளும் நீட் தேர்வுக்கு வெளியூர் செல்ல வசதி இல்லாமல் தவிக்கும் ஏழை மாணவர்களின் செலவுகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். உதவிகளை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்துக் கொள்ளலாம்
,
Wud love to sponsor travel expenses for atleast 2 underprevilleged students or Govt school students appearing for #NEET this year. Inbox me the details like hall ticket, place where ur exam hall assigned will book the tickets for u.
— Prasanna (@Prasanna_actor) May 4, 2018
நடிகர் பிரச்சன்னா முதல் ஆளாக தனது ட்விட்டர் பக்கத்தில், கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் நீட் நுழைவு தேர்வு எழுத வெளியூர்களுக்கு செல்ல உதவி வேண்டும் என்றால் தனது இன்பாக்ஸிற்கு விவரங்களை அனுப்பும் படி தெரிவித்துள்ளார். அவர்களின் செலவை முடிந்த வரை ஏற்று உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
,
#axessfilm and myself are ready to sponsor for 20 govt school students appearing in other states for #NEET 2018 details contact 9841777077
— arulnithi tamilarasu (@arulnithitamil) May 4, 2018
அரசியல் பின்புலம் இருந்தாலும், அரசியலை விட்டு திரைத்துறையில் முழு கவனத்தை செலுத்தி வரும் அருள்நிதி, பிரபல சினிமா நிறுவனம் மற்று தானும் சேர்ந்து வெளியூரில் நீட் தேர்வு எழுதும் 20 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
,
I can sponsor one NEET exam student to travel and stay and food. That's how much I can afford. I'm not rich but can help one student. #NEET exam.
— Gayathri Raguramm (@gayathriraguram) May 4, 2018
நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுமாம், வெளி மாநிலத்திற்கு சென்று நீட் தேர்வு எழுதும் ஏதாவது ஒரு மாணவரின் உணவு, தங்குமிடம், பயணம் உள்ளிட்ட மொத்த செலவை தான் ஏற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
,
Happy to fund 5 underprivileged students *from
— Chinmayi Sripaada (@Chinmayi) May 4, 2018
Tamilnadu* for the NEET exam.
Do Inbox hall ticket, exam centre and where the student+ guardian needs the ticket booked to.
Will send you the ticket.
பாடகி சின்மயியும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.
,
NEET பாலக்காடு , எர்ணாகுளம் சென்டர்களில் நீட் தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளுக்கு தங்கும் இடம் , உணவு ஏற்பாடு செய்து தருகிறேன். உங்கள் ஹால் டிக்கெட், பயணவிபரம் whatsapp இல் அனுப்பவும் . தொடர்புக்கு- Kasthuri , jai 9789895953. Please share
— Kasturi Shankar (@KasthuriShankar) May 4, 2018
நடிகை கஸ்தூரியும், வெளி மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
,
#NEETHelp pic.twitter.com/eJu0Kuf6qS
— Vishal (@VishalKOfficial) May 4, 2018
நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவரும் ஆன, விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கல் உதவிக்கு தன்னை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.