நீட் தேர்வில் தோல்வி.. மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை. தமிழகத்தில் தொடரும் சோகம்!

தலைவர்கள் பலரும் நீட்டுக்கு எதிராக மீண்டும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தலைவர்கள் பலரும் நீட்டுக்கு எதிராக மீண்டும் குரல் கொடுத்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neet exam result

neet exam result

neet exam result : நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரத்தில் மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்திற்கு நீட் வேண்டவே வேண்டாம் என பல போராட்டங்கள் நடந்தாலும் அதற்கு ஒரு தரப்பினர் அதற்கு ஆதரவு தெரிவித்தும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் வேறு வழியின்றி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்க்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் 3 ஆவது முறையாக நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது.

இந்த வருடத்திற்கான நீட் தேர்வு முடிவு நேற்று மதியம் வெளியாகியது. மாலையே 2 மாணவிகள் நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் தூக்கிட்டும், தீக்குளித்தும் தற்கொலை செய்துக் கொண்டனர். மாணவிகளின் இறப்பு தமிழகத்தையே மீளா துயரத்தில் ஆழ்த்தியது. நேற்று முதல் அரசியல் தலைவர்கள் பலரும் நீட்டுக்கு எதிராக மீண்டும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், 2 மாணவிகளின் இறப்பு செய்தியே ஜீரணிக்க முடியாத நிலையில் இன்று விழுப்புரத்தில் மோனிஷா என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

Advertisment
Advertisements

விழுப்பரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் மோனிஷா.தனியார் பள்ளியில் படித்து வந்த மோனிஷா கடந்தாண்டு பிளஸ் டூ தேர்வில் 720 மதிப்பெண்களை எடுத்துள்ளார். கடந்த 1 வருடமாக நீட் தேர்வுக்கு கடுமையாக பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் மோனிஷா 38 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். நீட் தேர்வினால் தமிழகத்தில் அடுத்தடுத்து 3 மாணவிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Neet

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: