/indian-express-tamil/media/media_files/gPHpOi1WRVPAP6nCSjkO.jpg)
தென்காசியில் லாரி மற்றும் கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திக், போத்திராஜ், சுப்பிரமணியம், வேல் மனோஜ், முகேஷ் என்ற மனோ இவர்கள் 5 பேரும் நண்பர்கள் கட்டிட தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
இதில் முகேஷ் என்ற மனோவின் அக்காள் கணவர் பழனியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வன் . இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவர்கள் 6 பேரும் நேற்று இரவு குற்றால அருவிகளுக்கு குளிக்கச் சென்றனர். அங்கு அருவிகளில் உற்சாகமாக குளித்து உள்ளனர். இன்று அதிகாலை 3 மணிக்கு அவர்கள் அங்கிருந்து கார் மூலம் வந்துள்ளனர்.
இதற்கிடையே கார்நாடக மாநிலம் பெல்லரியில் இருந்து கேரளாவிற்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துள்ளது. இந்த லாரி புளியங்குடி அருகில் உள்ள சிங்கலிப்பட்டிக்கும், புன்னையாபுரத்திற்கும் இடையே வந்தபோது எதிராக வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் சம்ப இடத்தில் உயிரிழந்தனர்.
அங்கு விரைந்த காவல்துறையினர் 6 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் பிரகாஷை போலிசார் கைது செய்தனர். அவருக்கு விபத்தில் காயம் ஏற்பட்டதால், அவர் போலீஸ் காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.