கடந்த 3 நாட்களில் 4.70 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து பல லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சிவசங்கர் முன்பதிவு மேற்கொண்டது குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது. “ கடந்த 3 நாட்களில் 4.70 லட்சம் பேர் இதுவரை சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எந்த இடையூறும் இல்லாமல் பொதுமக்கள் பயணிக்கின்றனர்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 30 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 63 ஆயிரம் பேர் அரசு போக்குவரத்து கழத்தில் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இதுவரை இதுபோன்று நடைபெற்றதில்லை. அதுபோல தீபாவளி முடிந்து சென்னை திரும்ப தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து இந்த பணியை மேற்கொண்டதால்தான் இது போன்று சிறப்பாக செயல்பட முடிகிறது ” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“