பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு, பாஸ்கர், சிவசங்கர், வெங்கடேசன், ராமலிங்கம், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசுச் செயலர்கள் ஜெயந்தகுமார், கேசவன், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்ட தலைமை செயல் அதிகாரி ருத்ரகௌடு, உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல், போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
வேலை, மருத்துவ சிகிச்சை, கல்வி போன்ற காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புதுச்சேரிக்கு வந்து செல்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த பேருந்து நிலையம் மிகவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.