Advertisment

சென்னை- திருப்பதி சாலை விரிவாக்கம்: பயண நேரம் குறையுமா?

சென்னை- திருப்பதி வரை கட்டப்பட்டுக் கொண்டிருந்த 22 கிலோமீட்டர் நெடுஞ்சாலை மீண்டும் கட்டுமானப்பணியை தொடங்க இருக்கிறது.

author-image
WebDesk
Nov 09, 2022 16:21 IST
சென்னை- திருப்பதி சாலை விரிவாக்கம்: பயண நேரம் குறையுமா?

சென்னையில் இருந்து திருப்பதி வரை கட்டப்பட்டுக் கொண்டிருந்த 22 கிலோமீட்டர் நெடுஞ்சாலை மீண்டும் கட்டுமானப்பணியை தொடங்க இருக்கிறது. இந்த நெடுஞ்சாலை பாடியில் இருந்து திருநின்றவூர் வரை செல்லும் வழியை இணைப்பதற்கு உதவுகிறது.

Advertisment

இந்த கட்டுமானப்பணி ஏறக்குறைய ஆறு வருடங்கள் கிடப்பில் போடப்பட்டதையொட்டி தற்போது மீண்டும் தொடங்கவிருக்கின்றனர். இந்த நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கும், அதற்கு தேவையான நிலங்களை பெறுவதற்கும் 152 கோடி ரூபாயை மாநில நெடுஞ்சாலைத் துறை வழங்கியுள்ளது.

publive-image

இந்த நெடுஞ்சாலைப் பணிகளை திருநின்றவூர்-திருவள்ளூர் வழியில் 17 கிலோமீட்டருக்கு நான்கு வழிச் சாலையாக மாற்றுவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ரூ.340 கோடியில் தொடங்கியது.

2007ல், திருத்தணி மற்றும் திருப்பதிக்கு வாகனங்கள் சுமூகமாக செல்வதற்கு, சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா எஸ்.எச்.ஐ., என்று ஆறு வழிச்சாலைகளை மேம்படுத்த, மாநில அரசு முன்மொழிந்தது.

இதேபோல், பாடி-கொரட்டூர் சந்திப்பில் இருந்து திருவணிந்திரவூர் வரையிலான 22 கிலோமீட்டர், சி.டி.எச்., பகுதியை, ஆறு வழிச்சாலையாக மாற்ற திட்டமிட்டுள்ள மாநில நெடுஞ்சாலைத் துறை, சாலையை நான்கு வழிச்சாலையாக மட்டுமே விரிவுபடுத்த முடியும் என்று கூறினர்.

மண்ணூர்பேட்டை, பாடி, அம்பத்தூர் மற்றும் சில பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன.

இதற்கிடையில், நெடுஞ்சாலைத்துறைக்கு நிலம் மாற்றுவதில், ஒரு சில அரசு நிறுவனங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2010-11ல் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, 2013ல் 1 லட்சத்தைத் தாண்டியது.

2013 பிப்ரவரியில், நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க, 168 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பல ஆய்வுகளுக்குப் பிறகு, 2014 இல் தொடங்க வேண்டிய பணி, நிலத்தின் எல்லைகளைக் கண்டறிவதில் உள்ள சிக்கல்களால் தாமதமானது.

இவ்வாறு நெடுஞ்சாலை கட்டுவதனால் பயணிகளின் பயண நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நெடுஞ்சாலைப் பணி மிகவும் அவசியம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Nhai #Chennai #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment