Advertisment

பா.ஜ.க. உடன் கூட்டணி; தாமரை சின்னத்தில் போட்டி: புதிய நீதிக்கட்சி

வருகின்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் புதிய நீதிக்கட்சி, பாரதிய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்றும் தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்றும் அக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
AC Shanmugam

2024 மக்களவை தேர்தலில் புதிய நீதிக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அறிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tn Bjp | Lok Sabha | 2024 மக்களவை தேர்தலில், புதிய நீதிக்கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியிக் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உடனான ஆலோசனைக்குப் பிறகு அக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.சி. சண்முகம், “நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் புதிய நீதிக்கட்சி போட்டியிடும். தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம்” என்றார்.

தொடர்ந்து, அ.தி.மு.க. கட்சி குறித்து பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை. எனவே அவர்கள் நாளை மோடியை பிரதமராக ஏற்கலாம்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tn Bjp Lok Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment