/indian-express-tamil/media/media_files/2025/11/03/rain-satelite-image-2025-11-03-06-09-49.jpg)
வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதால் மீண்டும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும் இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தொடர்ந்து கனமழை பெய்தது. ஆனால், கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதால் மீண்டும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி காலை 08:30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது மேலும் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (03.11.2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து தமிழகத்திலும் புதுவையிலும் நவம்பர் 8-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2 முதல் டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவானது. குறிப்பாக, மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 37.4 டிகிரி செல்சியஸ் மற்றும் கரூரில் குறைந்தபட்சமாக 18.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
முக்கியமான வானிலை அமைப்புகள்: நேற்று அரபிக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று (02-11-2025) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நீடிக்கிறது. அதேசமயம், இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, வடக்கு - வடமேற்கு திசையில் மியான்மர் மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
அடுத்த சில நாட்களுக்கான முன்னறிவிப்பு: கிழக்கு திசைக் காற்றின் மாறுபாடு காரணமாக, நேற்று (02-11-2025) மற்றும் இன்று (03-11-2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் மழையின் தாக்கம் சற்று அதிகரித்து, நவம்பர் 4-ம் தேதி வட தமிழகத்தின் சில பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நவம்பர் 8 வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us