வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்: அக். 26 முதல் தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு அந்தமான் கடல் மற்றும் வங்கக் கடலை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 26 (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் வங்கக் கடலை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 26 (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

author-image
WebDesk
New Update
Heavy rain (1)

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம்: அக். 26 முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அக்.26 முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisment

வங்கக் கடலின் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையத்தின்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், திருவள்ளூர், சென்னை மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (அக்.26) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விழுப்புரம் மற்றும் புதுச்சேரி தவிர மற்ற பகுதிகளில் அக்டோபர் 28 (செவ்வாய்க்கிழமை) வரை கனமழை தொடரக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, வெள்ளியன்று ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நகர்ந்து வியாழக்கிழமை (அக்டோபர் 23) காலை வட உள் தமிழ்நாடு மற்றும் தென் உள் கர்நாடகப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கர்நாடகாவை கடந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் நுழைய வாய்ப்புள்ளது.

Advertisment
Advertisements

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிய தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் அதே பகுதியில், அமினிதிவிக்கு (லட்சத்தீவு) மேற்கு-தென்மேற்கே சுமார் 560 கி.மீ. தொலைவிலும், கோவாவின் பனாஜிக்கு தென்மேற்கே 910 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடலைக் கடந்து மத்திய கிழக்கு அரபிக்கடலை நோக்கிச் செல்லக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அக்டோபர் 27 ஆம் தேதி வரை, தமிழகக் கடலோரம், ஆந்திரக் கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிப் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில், சில சமயங்களில் 55 கி.மீ. வேகம் வரையில் பலத்த காற்று வீசும். எனவே, மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை மாலைக்குள் (அக்டோபர் 24) கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்ச மழை அளவு

தமிழ்நாட்டில் பதிவான அதிகபட்ச மழையளவில், ராணிப்பேட்டையின் ஆரக்கோணத்தில் 13 செ.மீ, தருமபுரியின் அரூரில் 11 செ.மீ மற்றும் நாமக்கல், நீலகிரியின் வின்ட்வொர்த் எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: