/indian-express-tamil/media/media_files/edqJMNp5pzm1jbd6ACAQ.jpg)
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கு தேர்வானவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி இன்று (பிப்.6) கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருசிறது.
இந்த தேர்வில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் குழந்தை பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் தனது கைக்குழந்தையுடன்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் உடல் தகுதி தேர்வுக்கு கலந்து கொண்டது அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.