சென்னையில் சொத்து வரி: ரூ 5000 மிச்சப்படுத்த இதை பண்ணுங்க!

புதிய விதிகளின்படி, அபராதமாக செலுத்த வேண்டிய வட்டி ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, அபராதமாக செலுத்த வேண்டிய வட்டி ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Greater Chennai Corporation

நடப்பாண்டின் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள், பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) சொத்து வரி செலுத்துவதற்கான அபராதம் மற்றும் ஊக்கத்தொகை கட்டமைப்பை மாற்றியுள்ளது.

Advertisment

ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையான அரையாண்டு சொத்து வரி செலுத்தப்படாவிட்டால், நிலுவைத் தொகை செலுத்தப்படும் வரை குடிமை அமைப்பு மாதத்திற்கு 1% எளிய வட்டியை விதிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் புதிய விதிகளின்படி, ஏப்ரல் 1 முதல் 30 அல்லது அக்டோபர் 1 முதல் 30 வரை எந்த நேரத்திலும், செலுத்த வேண்டிய நிகர சொத்து வரியில் 5% மற்றும் அதிகபட்சமாக ரூ 5,000 ஊக்கத்தொகைக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.

முன்னதாக, குடிமை அமைப்பு ஆண்டுக்கு 2% வட்டி வசூலித்தது. புதிய விதிகளின்படி, அபராதமாக செலுத்த வேண்டிய வட்டி ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மாநகராட்சி அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆன்லைனில் பணம் செலுத்தும் இயக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களால் ஆண்டுதோறும் சொத்து வரி செலுத்தும் சொத்துகளின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளது.

குடியிருப்பாளர்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம், மண்டல அல்லது வார்டு அலுவலகங்களில் உள்ள இ-சேவா மையங்கள், நம்ம சென்னை மொபைல் ஆப், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம், www.chennaicorporation.gov.in இணையதளம் போன்றவற்றின் மூலம் சொத்து வரி செலுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Taxes Greater Chennai Corporation Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: