/tamil-ie/media/media_files/uploads/2023/09/Secretariate.jpg)
சென்னையில் அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசின் அரசிதழில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, சென்னையில் அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், அதில், கொளத்தூர் வருவாய் வட்டத்தின் ஆட்சி எல்லைகள் மற்றும் பரப்பளவும் மக்கள் தொகையும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதன்படி, கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் ஆகிய 3 வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாகக் கொண்டு கொளத்தூர் வருவாய் வட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,78,168 பொதுமக்கள் வசிக்கும், 6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில், பொதுப் பிரிவு, சமூக பாதுகாப்பு பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 6.24 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கொளத்தூர் வட்டத்தில் வட்டாட்சியர் உட்பட 36 பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.