New Update
/indian-express-tamil/media/media_files/fpzLynAS5bZ04njzzQQV.jpg)
தமிழ்நாட்டில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளை பெற 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளை பெற 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகளில் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதிய அட்டைகள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் மகளிர் உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்களில் பயன் பெற முடியாமல் இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகளை பெற 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களின் விண்ணங்களின் மீது தொடர்ந்து பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் புதிய ஸ்மார்ட் அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் குடும்ப அட்டையில் மாற்றம், புதிய அட்டைக்கான விண்ணப்பத்தை www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.