Tirunelveli - chennai New Vandhe Bharat : திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் விரைவு ரயிலை தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி செல்லுமாறு ரயில்வே வாரியத்திடம் தக்ஷின் ரயில்வே ஊழியர் சங்கத்தின் (டிஆர்இயு) உறுப்பினர்களும், ரயில் பயனாளர்களும் புதன்கிழமை (செப்.20) வலியுறுத்தினர்.
சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் விரைவு ரயில் செப்டம்பர் 24ஆம் தேதி தனது சேவையை தொடங்க உள்ளது. இது ரயில்களில் கூடுதல் நெரிசலைக் கணிசமாகக் குறைக்கும் என்றும் தக்ஷின் ரயில்வே ஊழியர் சங்கத்தின் (டிஆர்இயு) இணைச் செயலாளர் ஆர் சங்கர நாராயணன் கூறினார்.
தொடர்ந்து, “தாம்பரத்தில் நிறுத்தம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது” என்றார். மேலும், ரயில் தாம்பரத்தில் நிறுத்தப்படாமல் எழும்பூருக்குச் சென்றால், எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக இருக்கும்.
தாம்பரம் சந்திப்பில் இருந்து ஏறக்குறைய 100 பயணிகள் ரயிலில் ஏறலாம், அவர்கள் எளிதாக விமான நிலையத்திற்குச் செல்லலாம். தாம்பரத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு பல புறநகர் ரயில்கள் உள்ளன" என்று அவர் மேலும் கூறினார்.
தகவல் அறியும் உரிமை ஆர்வலரும் ரயில் பயனருமான வரதன் ஆனந்தப்பன் கூறுகையில், தாம்பரத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பால் தற்போது 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர்.
இதேபோல், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் தாம்பரத்தில் நிறுத்தப்படும் என ரயில்வே வாரியம் அறிவிக்க வேண்டும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“