இன்று தமிழக பட்ஜெட்: சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
O.Panneerselvam at Karunanidhi Gopalapuram's House, AIADMK Leaders At Karunanidhi Residence, மு.கருணாநிதி இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம்

Tamil nadu news today updates : டெல்லி சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, 81.67 கோடி மதிப்புள்ள 139 தேர்தல் நிதிப் பத்திரங்கள் எஸ்பிஐயின் பல்வேறு கிளைகளால் விற்கப்பட்டுள்ளது.  லோகேஷ் பாத்ரா (ஓய்வு)  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவலை பெற்றுள்ளார்.

Advertisment

இத்திட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 6,210 கோடி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தேர்தல் நிதியில்  வெளிப்படைத்தன்மை கேள்வியாக்கப் படுகிறது என்று எதிர்க் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கூறிவருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் இந்த திட்டத்திற்கு தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தது.

தேர்தல் நித பத்திரத்தை தடை செய்ய வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமனறத்தில் விசராணையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

பகத்சிங் மற்றும் பிற புரட்சியாளர்களை மீட்பதற்கு மகாத்மா காந்தி போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை என்று மத்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.  இந்த மாற்று வரலாற்றை மறைப்பதற்கு புரட்சியாளர்களின் வராலாற்றுக் கதைகள் வேண்டுமென்றே குறைக்கபப்டுவதாகவும்” தெரிவித்துள்ளார்.

 

Live Blog

Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    07:30 (IST)14 Feb 2020

    தமிழக பட்ஜெட்

    இன்று காலை 9 மணிக்கு தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    22:29 (IST)13 Feb 2020

    வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்களை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

    வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை உடனே வெளியிட அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    21:54 (IST)13 Feb 2020

    சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் - அதிமுக தீர்மானம்

    அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தலைமையில், நடைபெற்ற அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு கூட்டத்தில், சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். குடியுரிமை சட்ட விவகாரத்தில் அரசியல் செய்யும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    20:40 (IST)13 Feb 2020

    சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் ஏர் இந்திய ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி

    கொரோனா வைரஸ் பாதிப்புகள் காரணமாக சீனாவிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்திய ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

    19:35 (IST)13 Feb 2020

    சென்னையில் பிப்ரவரி 28 வரை போராட்டம், ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை

    சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை சென்னையில் போராட்டம், ஆர்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்த தடை விதித்துள்ளார்.

    19:10 (IST)13 Feb 2020

    கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்காணிக்க மத்திய அமைச்சர்கள் தலைமையில் உயர்மட்ட குழு

    நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கண்காணிக்க மத்திய அமைச்சர்கள் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய சுகாதாரத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

    18:45 (IST)13 Feb 2020

    டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் கைதான இடைத்தரகர், முத்துக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

    டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் கைதான இடைத்தரகர் முத்துகுமார் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணி பெற்ற ஆனந்தனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    18:04 (IST)13 Feb 2020

    சொல்வது ஒன்று; செய்வது வேறு அதிமுக இரட்டை வேடம் போடுகிறது - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசு செய்வதைத்தான் சொல்லும், சொல்வதைத்தான் செய்யும் என்று கூறிய நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில், ஆங்கில செய்தித்தாளில் வெளியான செய்தியை பதிவிட்டு, “கடந்த 3 ஆண்டுகளில் 2000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளன. படிப்படியாக மதுவிலக்கு என்ற வாக்குறுதி என்ன ஆனது? சொல்வது ஒன்று செய்வது வேறு என அதிமுகவின் இரட்டை வேடம் இது” கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    17:38 (IST)13 Feb 2020

    டிஎன்பிஎஸ்சி முறைகேடு - சிபிஐ விசாரிக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் கருத்து

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இதுவரை 16-க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க திமுக மனு அளித்துள்ளது. இது குறித்து திமுக மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்ஹ்டு சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    17:10 (IST)13 Feb 2020

    சட்டப்பேரவையில் விவாதிக்க திமுக முடிவு

    டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க திமுக முடிவு. எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சார்பில், சட்டப்பேரவை செயலகத்தில் தனி தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது

    17:10 (IST)13 Feb 2020

    சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

    டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

    முறைகேடுகள் குறித்து புள்ளி விவரங்களுடன் புதிய மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    16:37 (IST)13 Feb 2020

    மேலும் சட்டசிக்கலை உருவாக்கும்

    நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரிய வழக்கு

    தற்போது உத்தரவு பிறப்பித்தால் அது மேலும் சட்டசிக்கலை உருவாக்கும் - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்

    மத்திய அரசு தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

    16:36 (IST)13 Feb 2020

    சீனாவுக்கு மருத்துவப் பொருட்கள்

    நல்லெண்ண அடிப்படையில் சீனாவுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்ப உள்ளோம் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

    கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேரின் உடல்நிலை சீராக உள்ளது - ஹர்ஷவர்தன்

    16:36 (IST)13 Feb 2020

    மேயர் பதவியை பிடிக்க தான் ஆர்வம் காட்டுகின்றனர்

    "சொத்து வரியை மாற்றியமைக்க ஆர்வம் காட்டாமல் மேயர் பதவியை பிடிக்க தான் ஆர்வம் காட்டுகின்றனர்"

    அரசியல் கட்சிகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

    20 ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தாமல் தூங்கிக் கொண்டிருப்பதா?- நீதிபதிகள் கண்டனம்

    16:35 (IST)13 Feb 2020

    டயாலிசிஸ் வசதி ஏற்படுத்த கோரிய வழக்கு

    தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் வசதி ஏற்படுத்த கோரிய வழக்கு

    தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

    16:29 (IST)13 Feb 2020

    காவல்துறை சார்பில் ஆவணங்கள் சமர்பிப்பு

    பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு. மாநில தகவல் ஆணையத்தில் கல்வித்துறை துணை இயக்குனர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜர்.  2000 முதல் 2019 வரை 164 சம்பவங்கள் நடந்துள்ளதாக காவல்துறை சார்பில் ஆவணங்கள் சமர்பிப்பு

    15:52 (IST)13 Feb 2020

    மேலும் மூன்று பேர் கைது

    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் மூன்று பேர் கைது

    மருத்துவ துறை, பதிவு துறையை சேர்ந்த இரு பெண் அதிகாரிகள், இடைத்தரகர் கைது - சிபிசிஐடி

    15:28 (IST)13 Feb 2020

    விலை ரூ.4.10ஆக நிர்ணயம்

    நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் அதிகரித்து ரூ. 4.10ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.

    15:08 (IST)13 Feb 2020

    வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை

    பொறியியல் படிப்பில் சேர வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை. இயற்பியல் , கணிதம், உயிரியல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் படிந்திருந்தால் போதும். இந்த ஆண்டு முதல் அமல் - ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பு

    14:45 (IST)13 Feb 2020

    சென்னை மாநகர காவல்துறை திட்டம்

    சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு ஒன்றை உருவாக்க சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது.

    14:43 (IST)13 Feb 2020

    முதலமைச்சர் கொடுத்த கடிதத்தை, நிர்மலா சீதாராமனிடம் கொடுத்தேன் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

    முதலமைச்சர் கொடுத்த கடிதத்தை, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கொடுத்தேன் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

    14:41 (IST)13 Feb 2020

    ரூ.10 ஆயிரம் அபராதம்

    தொழிலதிபர்களின் வாராக்கடன்கள் குறித்து தொலைக்காட்சி, நாளேடுகளில் வெளியிட கோரியும், மாணவர்களின் கல்வி கடன் ரூ.55 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்யக்கோரியும் வழக்கு

    * வழக்கை தள்ளுபடி செய்து மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

    14:41 (IST)13 Feb 2020

    மேட்டூர் அணையை புனரமைக்க ஆய்வு

    அணைகள் புனரமைப்பு திட்டம் 2ன், கீழ் மத்திய அரசுக் குழுவினர் மேட்டூர் அணையை புனரமைக்க ஆய்வு. தமிழகத்தில் 36 அணைகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மேட்டூரில் இன்று ஆய்வு.

    13:27 (IST)13 Feb 2020

    பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாமை துவக்கி வைக்க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த பழங்குடியின சிறுவனை தனது செருப்பை கழட்டி விடுமாறு அழைத்தார். இந்த விவகாரம் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. பின்னர் அந்த சிறுவனின் பேச்சுவார்த்தை நடத்திய சீனிவாசன் தனது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கள் என்ன? என்று டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் பதிலளிக்க பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

    12:21 (IST)13 Feb 2020

    முதல்வரின் சொந்த மாவட்டத்தில் கூட தேர்வு முறைகேடு - சிபிஐ விசாரணை தேவை ஸ்டாலின்

    ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடுகள்-முதல்வரின் சொந்த மாவட்டத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டதாக முதல்வரிடமே தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர். அணிவகுக்கும் பல்வேறு புகார்களை சிபிஐ விசாரிக்க தாமதமின்றி உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.  

    11:51 (IST)13 Feb 2020

    குற்றவியில் வழக்கு உடைய தேர்தல் வேட்பாளர்கள் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு (2/2)

    வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும் குற்றப்பின்னணி குறித்து அரசியல் கட்சிகள் 72 மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  

    11:47 (IST)13 Feb 2020

    நகராட்சித் தேர்தல் தேதி தாமதம் ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்

    திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட காலதாமதம் ஆவதால்  நகராட்சி தேர்தல் தேதி அறிவிப்பு தாமதமாகிறது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் அறிவிப்பை உடனடியாக வெளியிட உத்தரவிட கோரிய வழக்கில்  இந்த பதிலை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.  

    11:09 (IST)13 Feb 2020

    குற்றவியில் வழக்கு உடைய தேர்தல் வேட்பாளர்கள் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    தேர்தல் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் கொண்டுவருவதற்கான நடவடிக்கையாக, ஏன் குற்றவியில் வழக்கு பதிவி செய்யப்பட்டவர்களுக்கு   ஏன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்பளிக்கப் பட்டது என்ற காரணத்தை அரசியல் கட்சிகள் தங்கள் வலைப்பக்கங்களில் வெளியிடவேண்டும்  என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   

    குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் அனைத்து விவரங்களும், உள்ளூர் செய்தித்தாள், ஒரு தேசிய செய்தித்தாள், பேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    10:39 (IST)13 Feb 2020

    மக்கள் வரி செலுத்த முன்வர வேண்டும்

    130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையில், 1.5 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளனர் ”என்று டைம்ஸ் நவ் உச்சி மாநாட்டில் மோடி தெரிவித்தார். ஆனால்  கடந்த ஆண்டில் மட்டும்  மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் சுற்றுலாப் பயணிகளாக  வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.  நாட்டில் 2,200 பேர் மட்டுமே  தங்கள் வருமான வரி கணக்கில் ஆண்டுக்கு ரூ. ஒரு கோடி வருவாய் அறிவித்திருப்பது நம்பமுடியாதது என்று கூறிய மோடி,  வரி செலுத்துவது சுமையில்லை என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    09:40 (IST)13 Feb 2020

    டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள தமிழர்களை காப்பாற்ற வேண்டும் - மு.க ஸ்டாலின்

    ஜப்பான் 'டைமண்ட் பிரின்சஸ் 'என்ற பயணிகள் கப்பல் கடந்த 9 நாட்களாக கொரோனா வைரஸ் காரணமாக  ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 3,500க்கும் அதிகமான மக்கள் துறைமுகத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். இந்த கப்பலில் 6 தமிழர்கள் உட்பட 100 இந்தியர்கள் உள்ளனர்.    தமிழர்கள் உள்ளிட்ட இந்திய பணியாளர்களை பாதுகாப்பாக அழைத்துவர வெளியுறவுத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

    09:28 (IST)13 Feb 2020

    தமிழக சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் ) நாளை தாக்கல் செய்யப்படுகிறது. நாளை காலை 10 மணிக்கு தமிழக  துணை முதல்வர் பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை வாசிப்பார்.    

    09:20 (IST)13 Feb 2020

    கே.சி பழனிசாமிக்கு ஜாமீன்

    அதிமுக கழகத்தின் பெயரில் போலி இணையதளம் நடத்துதல், அதிமுக உறுப்பினர் என்று கூறி பலரையும் ஏமாற்றல் போன்ற குற்றங்களுக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிசாமி ஜனவரி 24ம் தேதி கைது செய்யப்பட்டார். கோவை சிறையில் அடைக்க்கபப்ட்ட கே.சி பழனிசாமி இன்று ஜாம்னில் வெளிவருகிறார்

    Tamil nadu news today updates :

    குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பெயர்களை நீக்கி புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. குரூப் 4 தேர்வில் புதிய தரவரிசைப் பட்டியல்படி, பிப்ரவரி 19ஆம் தேதி முதல் கலந்தாய்வு அறிவித்துள்ளது. மேலும், கலந்தாய்விற்கு வர தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    கொரோனா வைரஸ் நமது மக்களுக்கும் நமது பொருளாதாரத்திற்கும் மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தலை அரசாங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தான் உணர்வதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    Tamilnadu

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: