/indian-express-tamil/media/media_files/HRLozlkji1Gby2Hutr36.jpg)
ஆங்கிலப் புத்தாண்டை (ஜனவரி 1, 2024) முன்னிட்டு கோயம்புத்தூரில் உள்ள மருதமலை முருகன் கோயிலின்
மலைமேல் சென்று சாமி தரிசனம் செய்ய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "01.01.2024 ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு மருதமலை மலைக்கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.
பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும் திருக்கோயிலின் பேருந்து மற்றும் திருக்கோயிலின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளின் மூலமாகவும், காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை மலைக் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.