New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/19/4vWED6IqO8oNlaoxQMKB.jpg)
அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென் மண்டல தலைவர் அமுதா பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இந்த ஆண்டு கோடை மழை வழக்கத்தை விட மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை (மே 19, 2025) இப்பகுதிகளில் பெய்த கோடை மழையின் அளவு 19.27 சென்டிமீட்டராக உள்ளது. இது, இப்பகுதிகளின் சராசரி கோடை மழை அளவை விட 90% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என்றும் கூறினார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய தகவலின்படி, தமிழ்நாட்டின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
கோவை - மழை பகுதிகளில் மிக கனமழை
ஈரோடு
திருப்பூர்
தேனி
திண்டுக்கல்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
சேலம்
நாமக்கல்
திருப்பத்தூர்
வேலூர்
ராணிப்பேட்டை
மதுரை
சிவகங்கை
ராமநாதபுரம்
விருதுநகர்
தென்காசி
நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நீலகிரி
சேலம்
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
தருமபுரி
கோவை
தேனி
திண்டுக்கல்
ஈரோடு
ராணிப்பேட்டை
கிருஷ்ணகிரி
வேலூர்
எனவே, இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.