தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எகிறும் வெப்பம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களில் வெப்பம் இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
summer-chennai-170523

வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களில் வெப்பம் இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் மழைக்காலம் முடிந்து குளிர்காலம் நிலவி வருகிறது. அதே நேரத்தில், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்து வரும் 4 நாட்களில் வெப்பம் இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

17-02-2025 மற்றும் 18-02-25: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment
Advertisements

19-02-2025 மற்றும் 21-02-25 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

18.02.2025: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Weather

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: