நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisment
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி அனல் மின் நிலையம், தென்னிந்தியாவில் உள்ள பெரிய அனல் மின் நிலையம் ஆகும். நெய்வேலி லிக்னைட் காப்பரேஷன் லிமிடெட் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் மூலம் வருடம் முழுக்க 30 மில்லியன் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisements
முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிக்காலத்தில் 1956ம் ஆண்டில் இது நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. என்எல்சியில் தற்போது 5 அனல் மின் நிலைய உற்பத்தி யூனிட்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் மொத்தமாக 4240 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் அங்கு இருக்கும் முதலாவது அனல் மின் நிலையத்தை மட்டும் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மூடல் பல வருடமாக இயங்கி வருவதால் இதை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆயுட்காலம் முடிந்து இயங்கி வருவதால் மூடுவதற்கு முடிவு எடுத்துள்ளது.2022க்குள் அனல் மின் நிலைய யூனிட்டை படிப்படியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் 45 ஆண்டுகாலம் ஆகும். ஆனால் இந்த அனல் மின் நிலையம் ஆயுட்காலம் முடிந்தும் செயல்பட்டு வந்தது. ஆயுட்காலம் முடிந்தும் 4 வருடங்களாக செயல்பட்டு வந்தது. இதனால் அதிக அளவில் மாசு ஏற்படுவதாகவும், கழிவுகள் அதிகம் உருவாவதாகவும் , அதேபோல் இதன் செயல்திறன் குறைவாக உள்ளது என்றும் புகார் வைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த யூனிட் மட்டும் 500-600 மெகாவாட் மின்சாரம் தயாரித்து வந்தது. தற்போது இதன் மீதான உற்பத்தி பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மொத்த உற்பத்தி அங்கு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.