மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்.எல்.சி. இந்நிறுவனம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ளது. இங்கு 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக பல்வேறு மாநிலங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த என்.எல்.சி மையத்தில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் தீ விபத்து சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருவது வழக்கம்.
/indian-express-tamil/media/post_attachments/cdf9f96f-4f6.jpg)
அந்தவகையில், நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலைய டிரான்ஸ்பார்மரில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது.
/indian-express-tamil/media/post_attachments/5b1ac4a2-e3e.jpg)
நெய்வேலி தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு தீயை அணைத்தனர். இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
க.சண்முகவடிவேல்