என்.எல்.சி நிறுவனத்தில் தீ விபத்து; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nlc fire accident

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று என்.எல்.சி. இந்நிறுவனம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ளது.  இங்கு 3 சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுத்து, அனல் மின் நிலையங்கள் மூலமாக பல்வேறு மாநிலங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த என்.எல்.சி மையத்தில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் தீ விபத்து சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருவது வழக்கம். 

Advertisment

அந்தவகையில், நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல் மின் நிலைய டிரான்ஸ்பார்மரில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது. 

Advertisment
Advertisements

நெய்வேலி தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு தீயை அணைத்தனர். இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

க.சண்முகவடிவேல்

Fire Accident Nlc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: