Advertisment

புலிகள் அமைப்பை உயிர்பிக்க சதி: நடிகை வரலட்சுமி முன்னாள் மேலாளர் மீது என்.ஐ.ஏ குற்றப் பத்திரிகை

விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்பிக்க சதி: நடிகை வரலட்சுமி முன்னாள் மேலாளர் மீது என்.ஐ.ஏ குற்றப் பத்திரிகை; புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முக்கிய இயக்குனராக ரகசியமாக பணிபுரிந்ததாக குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
Actress Varalaxmi Sarathkumar's PRO arrested in 300 kg drug and weapons smuggling case, Varalaxmi PRO arrested in 300 kg drug and weapons smuggling case, 300 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: நடிகை வரலட்சுமி முன்னாள் பி.ஆர்.ஓ கைது, நடிகை வரலட்சுமி முன்னாள் பி.ஆர்.ஓ ஆதிலிங்கம் கைது அடுத்த நடவடிக்கை என்ன, - Actress Varalaxmi Sarathkumar, 300 kg drug and weapons smuggling case

விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்பிக்க சதி: நடிகை வரலட்சுமி முன்னாள் மேலாளர் மீது என்.ஐ.ஏ குற்றப் பத்திரிகை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் புத்துயிர் பெற முயற்சித்தது தொடர்பான வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேலாளர் மீது என்.ஐ.ஏ (NIA), தமிழக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Advertisment

ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் புத்துயிர் பெற முயற்சித்ததாக ஜூன் 15, 2023 அன்று, சிறப்பு நீதிமன்றத்தில் 13 குற்றவாளிகளுக்கு எதிராக என்.ஐ.ஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது, அவர்கள் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் இந்தியப் பெருங்கடலின் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் சதித்திட்டங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேலாளர் ஆதிலிங்கம் மீது என்.ஐ.ஏ, தமிழக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் உயிர்ப்பிக்க ஆதிலிங்கம் சதி செய்து செயல்பட்டதாக என்.ஐ.ஏ குற்றம் சாட்டியுள்ளது.

சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்டவர் லிங்கம் ஏ என்ற ஆதிலிங்கம் என NIA அடையாளம் கண்டுள்ளது. 2022-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 16 பேர் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்த் திரையுலகில் புரொடக்‌ஷன் எக்சிகியூட்டிவ் என்று நம்பப்படும் ஆதிலிங்கம் இந்த வழக்கில் 14-வது குற்றவாளி

போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்ட ஹவாலா பணத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் விநியோகிக்கப்படும் ஹவாலா பணத்தை வசூலிக்கும் முகவராகவும் ஆதிலிங்கம் செயல்பட்டதாக குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ குற்றம்சாட்டியுள்ளது. சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்டவர் தமிழ்த் திரையுலகில் ஒரு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார், அதே நேரத்தில் குணசேகரன் மற்றும் அவரது மகன் திலீபன் உட்பட புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் தீவிரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் முக்கிய இயக்குனராக ரகசியமாக பணிபுரிந்தார் என்றும் NIA தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Varalakshmi Sarathkumar Ltte
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment