New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/muba.jpg)
முபாரக்
தமிழகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் என். ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
முபாரக்
தமிழகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் என். ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி, கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக், தஞ்சை நடராஜபுரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த பக்ரூதீன், திருச்சியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த அப்சல்கான், கோவையில் பி.எப்.ஐ முன்னாள் நிர்வாகி அப்பாஸ் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு தஞ்சவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் நடைபெற்ற மதமாற்றத்தை கண்டித்த பாமக நகர செயலாளர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 5 பேர் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.