/indian-express-tamil/media/media_files/GoUyVtXwR8ESquNe0Slm.jpg)
தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்க ஆதரவாளர்கள் வீடுகளில் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு பகுதியில் ஜேசிஸ் ஸ்கூல் அருகில் ஷர்புதீன் என்பவர் வீட்டில் கொச்சி என்.ஐ.ஏ ஆய்வாளர் விஜி என்பவர் தலைமையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. புதுகோட்டை மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீடு, சென்னையில் முகமது இஷாக் என்பார் வீட்டில் சென்னை என்.ஐ.ஏ ஆய்வாளர் அமுதா தலைமையில் சோதலை நடைபெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.