/indian-express-tamil/media/media_files/TTCLILalQXR5r2EbB93x.jpg)
இருசக்கர வாகன மோதிய விபத்தில் நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற நீதிபதி மீது இருசக்கர வாகன மோதிய விபத்தில் நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
பொள்ளாச்சி அருகே சின்னம்பாளையம் பகுதியில் வசிப்பவர் கருணாநிதி (58), இவர் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
இவர் இன்று (ஜூலை 16) மதியம் வீட்டிலிருந்து பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரத்தில் உள்ள மளிகை கடைக்கு தனது காரில் வந்து இறங்கி சாலையை கடந்துள்ளார்.
அப்போது உடுமலை சாலையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் நீதிபதி கருணாநிதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த நீதிபதி கருணாநிதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நீதிபதி கருணாநிதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நீதிபதி மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் கடந்த ஒரு மாதம் முன்பு பழநியில் உள்ள நீதி மன்றத்தில் இருந்து ஊட்டிக்கு மாறுதல் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.