Advertisment

கேரள சிறப்பு படை – மாவோயிஸ்ட் இடையே துப்பாக்கிச் சூடு; தமிழக எல்லையில் சோதனைச் சாவடிகள் உஷார்

கேரள மாநில தண்டர்போல்ட் சிறப்பு குழுவிற்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு; தமிழக எல்லை சோதனைச் சாவடிகளில் நீலகிரி எஸ்.பி நேரில் ஆய்வு

author-image
WebDesk
New Update
nilgiri checkpoint

கேரள மாநில தண்டர்போல்ட் சிறப்பு குழுவிற்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு; தமிழக எல்லை சோதனைச் சாவடிகளில் நீலகிரி எஸ்.பி நேரில் ஆய்வு

கேரள மாநில தண்டர்போல்ட் சிறப்பு குழுவிற்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்துள்ள நிலையில், தமிழக - கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் சோதனை சாவடிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. மேலும், காவலர்கள் விழிப்புடன் இருக்க நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக சென்று அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Advertisment

தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை கேரள மாநில தண்டர்போல்ட் சிறப்பு குழுவிற்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இதனை ஒட்டி தமிழக - கேரள மாநில எல்லையில் அமைந்திருக்கும் சோதனை சாவடிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஓவேலி சோதனை சாவடி ஆகியவற்றை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் நேரில் பார்வையிட்டு அங்கு பணியில் இருக்கும் காவலர்களுக்கு என் நேரமும் விழிப்புடன் செயல்பட அறிவுரைகள் வழங்கினார்.

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Kerala Nilgiris Maoist kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment