/indian-express-tamil/media/media_files/cXVYQt8kRlLNMI9LrQ1O.jpg)
Nilgiri's red alert
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, இன்று (ஆகஸ்ட் 5) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த இரு மாவட்டங்களுக்கும் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான எச்சரிக்கைகள்:
ரெட் அலர்ட் (அதி கனமழை): நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை): தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
கனமழை வாய்ப்பு: திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலவரம்:
ஆகஸ்ட் 6: கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை:
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 7 வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இந்த குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.