Advertisment

பேராசிரியை நிர்மலா உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மாணவிகளை தவறான பாதைக்கு  அழைத்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவி உயர் நீதிமன்ற  மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

Advertisment

கடந்த 2018ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலாதேவி பேசிய  ஆடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்பு சட்டம் உள்ளிட்ட  பிரிவுகளில் நிர்மலா தேர்வி மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக  உதவி பேராசிரியர்  முருகன், ஆராய்ச்சி மாணவர்  கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவித்தனர்.

இதற்கிடையே, கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில், நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக சுமார் 1,160 பக்க குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு  வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மதுரை காமராஜன் பல்கலைகழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர்  கருப்பசாமி  ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுத புகாரில் முன்னாள்  பேராசிரியை நிர்மலா தேவி ஏப்ரல் 30ம் தேதி கைது செய்யப்பட்டனர்.  அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது வந்தது. இந்த வழக்கில் ஏப்ரல் 30ம் தேதி 10 ஆண்டுகள்  சிறை தண்டனையும், அபராதமும்  விதித்தது நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் தன் மீதான தண்டனையை ரத்து செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அப்பீல் செய்துள்ளார். மேலும் இடைக்கால ஜாமின் கோரியும் மனு செய்துள்ளார். இம்மனுக்கள் நாளை விசாரணைக்கு வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment