/indian-express-tamil/media/media_files/2025/08/30/gzlbiq7a0aarz05-2025-08-30-15-03-37.jpg)
Nirmala Sitharaman
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் மூப்பனாரின் 24-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பை சிலர் தடுத்து நிறுத்தியதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
"எளிமை, நேர்மை, தேசியம் ஆகிய மூன்றையும் ஒருங்கே கொண்டவர் மூப்பனார். அவர் ஒரு தேசிய கட்சியின் தலைவராக நாடு முழுவதும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருந்தார். தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில், அவர் பிரதமராகும் ஒரு பொன்னான வாய்ப்பு உருவானது. ஆனால், அந்த சந்தர்ப்பத்தை சிலர் தடுத்து நிறுத்தினர். அந்த சக்தி யார் என்பது நமக்குத் தெரியும்.
இன்றைய தினம், மக்கள் தலைவர், அமரர் ஐயா G.K. மூப்பனார் அவர்களது 24 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்துக்குச் சென்று, மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தோம்.
— K.Annamalai (@annamalai_k) August 30, 2025
தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர், அண்ணன் திரு @GK__Vasan அவர்கள், மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர்… pic.twitter.com/pTKSXhshuN
"தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழின் பெருமை" என்று திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருப்பவர்கள், ஒரு தமிழர் பிரதமராகும் வாய்ப்பு வந்தபோது ஆதரவு அளிக்காமல் துரோகம் இழைத்தனர். இதை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. மூப்பனார் பிரதமராகாமல் தடுத்தது, தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்.
2026-ல் தமிழகத்தில் பெரும் மாற்றம் தேவை!
மூப்பனாரின் கொள்கைகளுக்கு ஏற்ற நல்லாட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டிய தருணம் இது. 2026 தேர்தலில் தமிழகத்தில் ஒரு பெரும் மாற்றத்தை நாம் அனைவரும் ஏற்படுத்த வேண்டும். மக்கள் நல்லாட்சிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குடும்பம் மட்டும் லாபம் அடைந்து வருகிறது. இதனால், தமிழ் மக்களுக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.
மக்கள் அனைவருக்கும் சேவை செய்வது நமது தலையாய கடமை. இந்தக் கூட்டணியை நல்ல முறையில் நடத்தி, அதன் மூலம் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். சிறிய சிறிய கருத்து வேறுபாடுகளை நாம் பொருட்படுத்தக் கூடாது. இங்குள்ள அனைத்து தலைவர்களும் முதிர்ச்சியுடன் செயல்பட்டு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்" என்று நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.