/indian-express-tamil/media/media_files/3FqdPQmzDY4zzIak7XxA.jpg)
ராமநாதபுரத்தில் வைக்கப்பட்டிருந்த நிர்மலா சீதாராமன் பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.
nirmala-sitharaman | ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சிக்கு உள்பட்ட லாந்தை பகுதியில் ரயில் பாதையைக் கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தக் கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அவரின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டது.
இது தொடர்பான புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்தப் பெயர் பலகையை வருவாய் துறையினர் அகற்றியுள்ளனர். மேலும் இந்தப் பெயர் பலகை அரசின் முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பெயர் பலகையை வருவாய் துறை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். முன்னதாக பாஜக பிரமுகர் எஸ்ஜி சூர்யா இந்தப் பெயர் பலகையை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.