/indian-express-tamil/media/media_files/IogybHTXj7LFKfHBrvFb.jpg)
தனது நாட்டில் பணத்திற்கு பதிப்பு இல்லை, உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என நித்தியானந்தா கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சர்ச்சைக்குள்ளான சாமியார் நித்தியானந்தா மீது தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சர்வதேச போலீசார் தேடியும் இதுவரை அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. 2019-ல் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு பேசுவார். இந்துக்களுக்காக கைலாசா எனத் தனி நாடு உருவாக்கி இருப்பதாக அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தினார்.
கைலாசா வர நினைப்பவர்கள் ஆஸ்திரேலியா வந்தால் அங்கிருந்து கைலாசா அழைத்து செல்லப்படுவார்கள் எனக் கூறினார். கைலாசா ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவாக இருக்கலாம் எனக் யூகம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது வரை அவர் எங்கிருக்கிறார், கைலாசா எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. இந்நிலையில், கைலாசா எங்கிருக்கிறது என குரு பூர்ணிமா தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.
வீடியோ ஒன்றை வெளியிட்ட நித்தியானந்தா இதைத் தெரிவித்துள்ளார். தன் நாட்டில் பணத்திற்கு மதிப்பு இல்லை. உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம். அங்கு வந்து நிங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம். செலவு எதுவும் இல்லை. மக்களுக்கு வரி ஏதும் இல்லை. இந்த சட்டம் மாற்றப்படாது. போலீஸ், ராணுவம் இல்லாத அகிம்சை தேசமாக கைலாசா இருக்கும்எனவும்கூறியுள்ளார். கைலாசாவில் உள்ள மடங்கள் பற்றி கூறிய அவர் மகா கைலாசா என்னும் இடத்தில் இருந்து நாட்டை நிர்வாகிப்பதாகவும் அவர் கூறியுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.