2024 மார்ச் மாதம் முதல் சென்னைலிருந்து பெங்களூருக்கு 2 மணிரத்தில் சாலை மார்கமாக பயணிக்க முடியும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ரூ.17,000 கோடியில் தயாரிகிவரும் பசுமைவழிச்சாலை திட்டத்தால், இரு நகரங்களுக்கு இடையேயான பயணம் குறையும். மேலும் இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
பெங்களூரு- சென்னை இடையேயான 8 வழிச்சாலை பணிகளை நிதின் கட்கரி நேரில் ஆய்வு செய்தார். இந்த சாலையானது ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தை இணைக்கிறது.
சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல 300 கி.மீ பயணிக்க வேண்டும். ஆனால் இந்த சாலை மூலம் 200 கி.மீ-யாக பயண தூரம் குறைக்கப்படுகிறது. மேலும் இந்த சாலை அமைக்கும் பாதையில் அடர் காடுகள் இருந்தால், அதை தவிர்த்துவிட்டு வேறு வழியில் சாலை அமைக்கப்படும் என்றும் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.