/tamil-ie/media/media_files/uploads/2020/11/coast-guard.jpg)
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், புதன்கிழமை மாலை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்பதால், இந்திய கடலோர காவல் படை மறும் இந்திய கடற்படை பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொள்ள நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மீனவர்கள் மற்றும் வணிகர்களுக்கு உதவுவதற்காக நான்கு கடலோர காவல்படையின் கடற்படை ரோந்து கப்பல்கள் கடலில் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. புயல் கரையை கடந்த பிறகு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை உடனடியாக விரைந்து செய்வதற்கு 2 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 3 டோர்னியர் விமானங்கள் விசாகப்பட்டினத்தில் கண்காணிப்பு மற்றும் புயல் சேதத்தை மதிப்பீடு செய்வதற்காக காத்திருக்கின்றன.
இது குறித்து கடலோர காவல்படை அதிகாரிகள் கூறுகையில், 15 பேரிடர் நிவாரண குழுக்கள் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உதவி வழங்க தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து பேரிடர் மீட்பு மற்றும் உதவிக் குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொள்ள மீட்பு பணி குழுக்களுடன் ஐ.என்.எஸ். பருந்து கப்பலில் இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனுடன் சென்னையில் 5 வெள்ள நீரில் மக்களை மீட்கும் குழுவினரும் வெள்ள நீரில் குதித்து காப்பாற்றும் ஒரு குழுவும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.