nivar nivar cyclone update cyclone : வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக வலுவடைந்தது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.
அதே நேரத்தில் சென்னையில் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசியபடி, மழையும் பெய்து கொண்டிருந்தது. மேலும் சென்னை மெரினா கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது. இதேபோல், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன், பலத்த காற்றும் வீசியது.
இரவு 8.30 மணி நிலவரப்படி கடலூருக்கு கிழக்கே தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே 85 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கே தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்தது.
இரவு 10.45 மணிக்கு அதி தீவிர புயலின் ஆரம்பப்பகுதி புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக புயலின் மையப்பகுதி நள்ளிரவில் கடக்க தொடங்கியது, அதி தீவிர புயலாக கரையைக் கடக்க தொடங்கிய நிவர் புயல் தீவிர புயலாக வலுவிழந்து கரையக் கடந்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக புயல் கரையைக் கடந்தது.
இந்நிலையில், புயல் கரையை கடக்கும் இடத்தை இந்திய வானிலை மையம் 3 நாட்களுக்கு முன்பே மிகச் சரியாக கணித்து பாராட்டுகளை பெற்றுள்ளது. 3 நாட்களுக்கு முன்பே இந்திய வானிலை மையம், மிக சரியாக நிகர் புயலானது புதுச்சேரி மிக அருகில் மகாபலிபுரம் -காரைக்கால் அருகே கரையை கடக்கும் என தெரிவித்திருந்தது. இதற்கான விளக்க வரைப்படத்தையும் இந்திய வானிலை மையம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இந்திய வானிலை மையத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
புகைப்படங்கள் விளக்கம்:
முதல் படம், 23 ஆம் தேதி இந்திய வானிலை வெளியிட்டது.வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக மாறி அது புயலாக உருவெடுத்து, மகாபலிபுரம், - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என தெரிவித்திருந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2020/11/21.jpg)
இரண்டாவது படம், 25 ஆம் தேதி நள்ளிரவு நிகர் புயலானது மகாபலிபுரம், - காரைக்கால் இடையே கரையை கடந்ததை குறிக்கிறது. 3 நாட்கள் முன்பே இந்திய வானிலை மையம் மிக சரியாக கணித்தது விரிவாக தெரிகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/11/21-1.jpg)
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”