Advertisment

நெய்வேலியில் தொடரும் போராட்டம்: திடீரென மயங்கி விழுந்த ஊழியர்

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி 19 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
NLC contract workers strike

என்.எல்.சி

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல் பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம் 19 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இன்றைய போராட்டத்தின் போது ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அவரை சக தொழிலாளர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தப் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

ஏற்கனவே என்எல்சி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். முன்னதாக இங்கு நடந்த விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் டனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neyveli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment