Advertisment

‘தொண்டர்கள எதுவும் பண்ணாதீங்க’; காட்டமாக பேசிய அன்புமணி; சமாதானம் செய்த விழுப்புரம் டி.ஐ.ஜி

என்.எல்.சி.,க்கு எதிரான பா.ம.க போராட்டம்; கைது செய்யப்பட்ட அன்புமணியிடம் பேச்சு வார்த்தை நடத்திய விழுப்புரம் டி.ஐ.ஜி; தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என வேண்டுகோள்

author-image
WebDesk
New Update
அன்புமணி ராமதாஸ் கைது

அன்புமணி ராமதாஸ்

சோற்றுக்கு நாளைக்கு என்ன செய்வீங்க, தொண்டர்களை கைது செய்ய வேண்டாம் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக கேட்டுக் கொண்ட நிலையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி அவரை சமாதானப்படுத்தினார்.

Advertisment

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வருகிறது அனல் மின் உற்பத்தி நிலையமான என்.எல்.சி. இந்த நிறுவனத்தின் சுரங்கப் பணிகளுக்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து நிலம் கையப்படுத்தப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து, தற்போது குழாய் அமைக்கும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் கையப்படுத்தப்பட்ட நிலத்தில், நிலத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது என்.எல்.சி நிர்வாகம் விவசாயம் செய்யப்பட்ட நிலங்களில் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: என்.எல்.சி போராட்டத்தில் கலவரம்: 2 சிறுவர்கள் உள்பட பா.ம.கவைச் சேர்ந்த 28 பேருக்கு நீதிமன்ற காவல்

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி, அதன் தலைவர் அன்புமணி தலைமையில் வெள்ளிக்கிழமை என்.எல்.சி.,யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது. என்.எல்.சி பிரதான நுழைவுவாயில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்துச் செல்ல அறிவுறுத்தினர். ஆனால், அன்புமணி அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார், காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இதனால் அங்கு பா.ம.க.,வினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், அன்புமணி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.,வினர் போலீசாரின் வாகனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

பின்னர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்த போலீசார், அன்புமணியை தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அன்புமணியுடன் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அப்போது இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, போராட்டம் அமைதியாக நடந்தது, சம்பவம் தற்செயலாக நடந்தது, தேவையில்லாமல் நடந்துவிட்டது, போராட்டத்தில் கலந்துக் கொண்டு கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என டி.ஐ.ஜியிடம் அன்புமணி கேட்டுக் கொண்டார்.

மேலும், நீங்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர், உங்க அப்பா விவசாயி, இன்றைக்கு விவசாய நிலங்களை எல்லாம் அழித்துவிட்டால், நாளைக்கு சோற்றுக்கு என்ன செய்வது என்று டி.ஐ.ஜியிடம் அன்புமணி கேள்வி எழுப்பினார். அப்போது, நீங்கள் மத்திய அமைச்சராக இருந்தப்போது நான் கல்லூரி மாணவராக இருந்தேன் என அன்புமணியிடம் டி.ஐ.ஜி கூறினார்.

பின்னர் டி.ஐ.ஜி சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருணை தனது தொலைப்பேசியில் வாட்ஸ் அப் காலில் தொடர்புக் கொண்டு, அன்புமணியிடம் போனை கொடுத்தார். சிக்னல் சரியாக கிடைக்காததால், அன்புமணி போனை வழக்கறிஞர் பாலுவிடம் கொடுத்தார்.

சிக்னல் சரியான பின்னர் அன்புமணியும் ஏ.டி.ஜி.பி-யும் போனில் பேசிக் கொண்டனர். அப்போது அன்புமணி ஏ.டி.ஜி.பி-யிடம் நடந்த விவரங்களை எடுத்துக் கூறினார். மேலும், எங்களை கைது செய்யுங்கள், ஒரு பிரச்சனையும் கிடையாது, ஆனால் தொண்டர்களை விட்டுவிடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

பின்னர் செல்போன் உரையாடல் முடிந்ததும், ஏற்கனவே ஜெயங்கொண்டத்தில் நிலக்கரிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திரும்ப ஒப்படைக்கபட்டது. அதே போல் தமிழக அரசு இப்போதும் ஒப்படைக்காலாமே என டி.ஐ.ஜியிடம் அன்புமணி கேள்வி எழுப்பினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anbumani Ramadoss Nlc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment