/indian-express-tamil/media/media_files/HRLozlkji1Gby2Hutr36.jpg)
மருதமலையில் பேருந்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்; வீடியோ வெளியிட்டு வேதனை!
கோவை மருதமலையில், அடிவாரத்தில் இருந்து மலை மீது உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலை பக்தர்கள் சென்றடைய மலைப் பாதையும், படிக்கட்டுப் பாதைகளும் உள்ளன. பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மலையில் வாகனங்கள் நிறுத்தப் போதிய இட வசதி இல்லாததாலும், பாதுகாப்பு கருதியும், விசேஷ நாட்களில் மலைக்குச் செல்ல இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
இதனால், வாகனங்களில் வரும் பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, மலைக் கோவிலுக்குச் செல்ல படிக்கட்டுப் பாதையையும், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 5.20 கோடி ரூபாய் மதிப்பில் 'லிஃப்ட்' (மின் தூக்கி) அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மருதமலையில் பேருந்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்; வீடியோ வெளியிட்டு வேதனை!#marudhamalai#buspic.twitter.com/NiGaLVo56x
— Indian Express Tamil (@IeTamil) November 2, 2025
இந்நிலையில், இன்று காலை 11.30 மணி முதல் அடிவாரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பேருந்துக்காகக் காத்திருந்தும், பேருந்துகள் வராததால் நீண்ட நேரமாக காத்து நிற்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ள ஆதங்கக் குரலில், "நீண்ட நேரமாகியும் பேருந்துகள் வரவில்லை, பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு, அதிகப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us