Advertisment

அரசு பஸ்களில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது: அரசாணை வெளியீடு

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author-image
WebDesk
New Update
government bus

Tamil News Updates

தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Advertisment

இந்த அரசு பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று முன்பு தெரிவித்திருந்தனர். இதை தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "அரசு பேருந்துகளில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது; கட்டணமும் வசூலிக்கப்படாது.

மாவட்ட விரைவு பஸ்களில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது", இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment