தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் இனிமேல் சிறப்பு தரிசனம் என்னும் வழக்கத்தை தடுப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “கோவிலில் சிறப்பு தரிசனம் பெரும் நடைமுறை திமுக ஆட்சி கொண்டுவரவில்லை. மேலும் இதை தடுப்பதற்கு மனிதவள துறை நடவடிக்கை எடுத்து வருகிறது", என்றார்.
![publive-image publive-image](https://indianexpress.com/wp-content/uploads/2022/08/anigif98765.gif)
நாமக்கல்லில் உள்ள பிரபலமான ஆஞ்சநேயர் கோவிலில் வருடத்திற்கு 40 லட்சம் ரூபாய் சிறப்பு தரிசனத்தின் மூலமாக கிடைக்கிறது. இருப்பினும், சிறப்பு தரிசனமாக தலா ரூ.20 வழங்கி வரும் வழக்கத்தை தமிழக அரசு நிறுத்தியது என்று அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், "கோவிலுக்கு வரக்கூடிய மற்ற வருமானங்களைக் கொண்டு நிர்வகிக்கலாம் என்று கூறினோம். வரும் நாட்களில், சிறப்பு தரிசனம் எங்கு நடந்தாலும், அவற்றைத் தடுக்க படிப்படியாக நடவடிக்கை எடுப்போம், ”என்று அமைச்சர் கூறினார்.
கோவில்களின் கருவறைக்குள் சிறப்பு அனுமதிச்சீட்டு உள்ளவர்கள் நுழைவதாக வெளியான தகவலை அமைச்சர் மறுத்தார். “சிறப்பு தரிசனத்திற்காக பாஸ் இருந்தாலும் யாரும் கருவறைக்குள் நுழைய முடியாது. கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் (பூசாரிகள்) அதை நடக்க அனுமதிக்க மாட்டார்கள், ”என்றார் சேகர்.
மாநிலத்தில் சமய நிகழ்வுகள் சுமூகமாக நடைபெற அரசு மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார். கோவிலுக்குள் யாரும் உயர்ந்தவர்கள் அல்ல, அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல முயற்சிகளை எடுத்து வருவதாக கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil