Advertisment

சிலை கடத்தல் புள்ளிகள் யாராக இருந்தாலும் வேடிக்கை பார்க்க முடியாது : நீதிபதி எச்சரிக்கை

சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய யாராக இருந்தாலும் உயர் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது நீதிபதி எச்சரிக்கை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
madras-high-court

சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய யாராக இருந்தாலும் உயர் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது நீதிபதி எச்சரிக்கை.

Advertisment

தமிழகத்தில் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி பொன். மாணிக்கவேலை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணை உச்சநீதிமன்றம் தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் அவர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து உயர்நீதிமன்றம் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அரசு காலம் தாழ்த்தியதையடுத்து , இது தொடர்பாக ஆணையை வெளியிட்டு அரசு இன்று ( 07.09.2017) நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கடந்த செவ்வாய்க்கிழமை நீதிபதி மகாதேவன் மீண்டும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு குழு அமைத்து அரசு ஆணை பிறப்பித்து விட்டதாக உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும் சிலைகடத்தல் தொடர்பாக உள்ள 19 வழக்குகள் பொன்.மாணிக்கவேல் விசாரிப்பதற்காக மாற்றப்பட்டு விட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். பிற வழக்குகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்கும் என தெரிவித்தார்.

அப்போது நீதிபதி மகாதேவன், ’எத்தனை சிலை கடத்தல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு வழக்கறிஞர், சிலை கடத்தல் தொடர்பாக மொத்தம் 531 வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த நீதிபதி, சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், எதனடிப்படையில் டி.ஜி.பி 19 வழக்குகளை மட்டும் மாற்றி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்தார்,என கேள்வி எழுப்பினார்.

நீதிமன்ற உத்தரவின்படி, கும்பகோணத்தில் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டுவிட்டதா ? எனவும் நீதிபதி வினவினார்.

அதற்கும் உரிய விளக்கத்தை அரசு தரப்பில் கொடுக்காததை அடுத்து, வரும் திங்கட்கிழமை தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என எச்சரித்தார். ( ஆனால் இதனை உத்தரவிடவில்லை) ஆனால் அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று நேரில் ஆஜராகுவது குறித்து நீதிபதி உத்தரவு பிறப்பிக்கவில்லை.

இதனையடுத்து அரசு வழக்கறிஞர் 19 வழக்குகளை மட்டும் மாற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பரிந்துரை கடிதம் கொடுத்ததன் அடிப்படையிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என கூறினார்.

அதற்கு நீதிபதி, தலைமை செயலாளர், டி.ஜி.பி, ஐ.ஜி என யாராக இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டுமே தவிர அதன் மீற அவர்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

இதனைடுத்து அரசு வழக்கறிஞர், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மற்றும் அரசிடம் இது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரினார்.

இதனையேற்ற நீதிபதி, சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் பொன்.மாணிக்கவேலுக்கு மாற்றாதது ஏன் எனவும், சிறப்பு நீதிமன்றம் அமைக்காதது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி மகாதேவன், விசாரணையின் போது இந்த தமிழ் மண், உலகத்துக்கே ஞான பீடம், இங்குள்ள தொன்மையான சிலைகளை யாரும் திருட்டுத்தனமாக எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம். மேலும் இந்த சிலை கடத்தலில் யார் ஈடுபட்டிருந்தாலும், எந்த அதிகாரிகள் ஈடுபட்டிருந்தாலும், தொடர்பிருந்தாலும் அவர்களை இந்த நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டு சும்மா விடாது, அவர்கள் மேல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர், இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அர்சகர் விவரம், சிலை விவரம், கோயில்கள் விவரம் அனைத்தும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதன்பிறகு இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Chennai High Court Pon Manikkavel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment