கோவையில் என் காலடி படாத இடமே இல்லை: இளையராஜா பேச்சு

கோவையில் செய்த ஆர்மோனிய பெட்டியைத் தான் தற்பொழுது வரை பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்த இசைஞானி இளையராஜா, கோவையை தன்னிடமிருந்து பிரிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

கோவையில் செய்த ஆர்மோனிய பெட்டியைத் தான் தற்பொழுது வரை பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்த இசைஞானி இளையராஜா, கோவையை தன்னிடமிருந்து பிரிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Covai ilaiyaraja

கோவையில் என் காலடி படாத இடமே இல்லை: இளையராஜா பேச்சு

கோவையில் இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி இன்று (ஜூன் 6) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த இளையராஜா, தனியார் நட்சத்திர ஹோட்டலில் விளம்பரதாரர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். அவருக்கு ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சிறப்பு விருது வழங்கபட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரசிகர்கள் இளையராஜாவிற்கு பூங்கொத்து, ஓவியங்கள் வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

இந்த நிகழ்வில் பேசிய இளையராஜா, நான் பேச்சாளர் கிடையாது, பாட்டாளி என தெரிவித்தார். பாட்டாளி என்பவன் பாடுபவன், பாடுபடுவன் வேலை செய்பவன் என தெரிவித்த அவர், என் பாடு வேறு, பாட்டாளிகள் அவங்க பாடு வேறு எனவும், என் பாடு பாட்டாகின்றது எனவும் தெரிவித்தார். எங்கெங்கோ சிற்றோடைகள் நதியாக ஒடுவதைப் போல, ஒரு நோக்கத்திற்காக இங்கே அனைவரும் வந்து இருக்கின்றீர்கள் என வந்த விளம்பரதாரர்களை வரவேற்றார். பின்பு பேசிய அவர், கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது எனவும், இங்கு ஆர்மோனியம் வசிக்காத இடங்களே கிடையாது எனவும் தெரிவித்தார்.

நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கோவையில் செய்தது என தெரிவித்த அவர், என் அண்ணன் இங்கேதான் ஒருவரிடம் ஆர்மோனியம் வாங்கினார் எனவும், இப்போது வரை அது என்னிடம்தான் இருக்கின்றது, அதைப் பயன்படுத்தி வருகின்றேன் என தெரிவித்தார். கோவைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு என்றுகூட சொல்ல முடியாது, கோவையை நான் பிரிவது கிடையாது என்று சொல்லலாம் என இசைஞானி இளையராஜா பேசினார். பின்னர் அனைத்து விளம்பரதாரர்களுடன் குழு குழுவாக இளையராஜா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Coimbatore Ilaiyaraja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: