வட சென்னையில் இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் நிறுத்தம்!

குடியிருப்பாளர்கள் தண்ணீரைச் சேமித்து, 'டயல் எ வாட்டர்' ஆன்லைன் சேவையை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குடியிருப்பாளர்கள் தண்ணீரைச் சேமித்து, 'டயல் எ வாட்டர்' ஆன்லைன் சேவையை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
வட சென்னையில் இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் நிறுத்தம்!

நாளை (வியாழக்கிழமை) இரவு முதல் சில மணி நேரத்திற்கு வடசென்னையில் உள்ள சில பகுதிகளுக்கு குழாய் நீர் விநியோகம் செய்யப்பட போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

publive-image

சென்னை மெட்ரோவாட்டர் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "பைப்லைனை இணைக்கும் பணி வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கும். குடியிருப்பாளர்கள் தண்ணீரைச் சேமித்து, 'டயல் எ வாட்டர்' ஆன்லைன் சேவையை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வடசென்னையில் உள்ள சில பகுதிகளுக்கு வியாழன் இரவு முதல் வெள்ளிக் கிழமை காலை 6 மணி வரை பெரிய குடிநீர் குழாய் இணைப்பு வேலை காரணமாக குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படாது.

Advertisment
Advertisements

300 மில்லிலிட்டர் புழல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரை எடுத்துச் செல்லும் 800 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட பைப்லைன் மற்றும் 400 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட பைப்லைன் ஒன்றையொன்று இணைக்கும் பணி இரவு 10 மணிக்குத் தொடங்கும்.

மண்டலம் 4-க்கு உட்பட்ட பகுதிகளான வியாசர்பாடி, முத்தமிழ் நகர், எருக்கஞ்சேரி, கொடுங்கையூர், சர்மா நகர், கவியரசு கண்ணதாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட மாட்டாது. மண்டலம் 6ல் உள்ள கன்னிகாபுரத்திலும் தண்ணீர் வராது.

குடியிருப்பாளர்கள் தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைக்கலாம் மற்றும் 'டயல் ஃபார் வாட்டர்' ஆன்லைன் சேவை மூலம் மொபைல் நீர் விநியோகத்தையும் பதிவு செய்யலாம்", என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: